அமிருதசரஸ் ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வர்

அமிருதசரஸில் நடைபெற்ற தசரா விழாவின் போது ரயில் மோதி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரை முதல்வர் அமரிந்தர் சிங் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அமிருதசரஸ் ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வர்


அமிருதசரஸ்: அமிருதசரஸில் நடைபெற்ற தசரா விழாவின் போது ரயில் மோதி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரை முதல்வர் அமரிந்தர் சிங் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அமன்தீப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்த முதல்வர் அமரிந்தர் சிங், சிகிச்சை பெற்று வருவோருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார். 

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் தசரா கொண்டாட்டத்தின் போது தண்டவாளத்தில் நின்றிருந்தவர்கள் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் 61 பேர் பலியாகினர். படுகாயமடைந்தவர்கள் 7 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com