ரூ. 9,100 கோடி செலவில் ராணுவ தளவாடங்கள் வாங்க பாதுகாப்பு துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது.
முப்படைகளுக்கும் தேவையான கருவிகள் மற்றும் ஆயுதங்கள் வாங்குவது குறித்து பாதுகாப்பு அமைச்சகத்தின் உயரிய அமைப்பான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில்(டிஏசி) முடிவெடுக்கும். பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற டிஏசி கூட்டத்தில் ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள் கொள்முதல் செய்ய அந்த அமைப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதன்படி, ஆகாஷ் ஏவுகணைகள் உள்பட பல கருவிகள் வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், டி90 ரக டேங்கர்களில் பயன்படுத்தப்படும் நவீன ஆயுதங்களுக்கான மாதிரி வடிவமைப்புக்கும், பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியது.