லோக்பால் தேர்வுக் குழுக் கூட்டம்: 6-ஆவது முறையாக புறக்கணித்தார் கார்கே

லோக்பால் தேர்வுக் குழுக் கூட்டத்தை மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மீண்டும் புறக்கணித்தார்.
லோக்பால் தேர்வுக் குழுக் கூட்டம்: 6-ஆவது முறையாக புறக்கணித்தார் கார்கே


லோக்பால் தேர்வுக் குழுக் கூட்டத்தை மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மீண்டும் புறக்கணித்தார்.
நிகழாண்டில் மட்டும் தேர்வுக் குழு கூட்டத்தை கார்கே புறக்கணிப்பது இது ஆறாவது முறையாகும். 
தேர்வுக் குழுக் கூட்டத்தை புறக்கணிக்கும் முடிவை பிரதமர் மோடிக்கு கடிதம் அவர் தெரியப்படுத்தினார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
லோக்பால் தேர்வுக் குழு கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராக என்னை மத்திய அரசு அழைக்கிறது. உண்மையில், லோக்பால் சட்டப் பிரிவிவு 4-ன் படி, சிறப்பு அழைப்பாளரை அழைக்க அனுமதியில்லை. எனவே, இந்தக் கூட்டத்தை மீண்டும் புறக்கணிக்கிறேன்.
கடந்த 4 ஆண்டுகளில் எதிர்க்கட்சிகளில் தனிப் பெருங்கட்சியாக இருக்கும் கட்சிக்கு இந்தக் குழுவில் வாய்ப்பு அளிக்க சட்டப் பிரிவில் பாஜக அரசு திருத்தம் செய்யவில்லை.
ஆனால், சிறப்பு அழைப்பாளராக நான் தொடர்ந்து அழைக்கப்படுவது வெறும் கண்துடைப்பு என்று கருதுகிறேன். ஏனென்றால், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையும், கருத்து கூறும் உரிமையும் கிடையாது என்று அந்தக் கடிதத்தில் கார்கே குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் என பொது வாழ்வில் உள்ளவர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் விசாரிப்பதற்கு லோக்பால் என்ற அதிகாரம் பொருந்திய அமைப்பை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. அதற்கான மசோதா கடந்த 2013-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, லோக்பால் பரிசீலனைக் குழுவை முதலில் அமைக்க வேண்டும். அதில் உள்ளவர்களே லோக்பால் அமைப்பின் தலைவர் யார்? உறுப்பினர்கள் யார்? என்பதை பரிந்துரைப்பார்கள். ஆனால், அதற்கு முன்னதாக பரிசீலனைக் குழுவில் யார் யார் இடம்பெற வேண்டும் என்பதை பிரதமரை உள்ளடக்கிய லோக்பால் தேர்வுக் குழு தேர்ந்தெடுக்கும்.
தேர்வுக் குழுவில், பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, மக்களவைத் தலைவருடன் சேர்த்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், தற்போதைய மக்களவையில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. கடந்த 2014 பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்துக்குத் தேவையான இடங்களில் கூட காங்கிரஸ் வெற்றி பெறாததே அதற்குக் காரணம். இதனால், லோக்பால் தேர்வுக் குழுவில் அந்த இடத்துக்கு எவரையும் நியமிக்க முடியாத சூழல் இருந்தது.
இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் இல்லாவிட்டால், ஆளுங்கட்சிக்கு அடுத்து அதிக உறுப்பினர்களைக் கொண்ட முக்கிய கட்சியின் தலைவரை அந்த இடத்துக்கு தற்காலிகமாக நியமிக்கலாம் என சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி மல்லிகார்ஜுன கார்கே தேர்வுக் குழுவுக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com