நாட்டில் 10 கோடி ஏழைக் குடும்பங்கள் மருத்துவ வசதி பெறும் "ஆயுஷ்மான் பாரத்' - தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கிறார்.
நாடு முழுவதும் உள்ள 10 கோடி ஏழைக் குடும்பங்கள், ஆண்டுக்கு தலா ரூ. 5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.