காங்கிரஸ் மற்றும் ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் மோடிஃபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசியச் செயலர் அமித் ஷா கூறியுள்ளார்.
இந்தியப் பிரதமர் மோடி, இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தைக் கொண்டு வந்து அதற்காக பணியாற்றிக் கொண்டிருந்த போது, காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் நாட்டை உடைப்போம் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்தியாவில் இருந்து வறுமையை ஒழிப்போம் என்று மோடி குரல் கொடுத்த போது மோடியை ஒழிப்போம் என்று எதிர்க்கட்சிகள் கூறினர். இதன் மூலம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மோடிஃபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது புரிகிறது என்று கூறினார்.
மேலும், எதிர்க்கட்சியினருக்கு கொள்கை என்று எதுவும் இல்லை. ஒடிசாவை ஆளும் நவீன் பட்நாயக், தனது தவறான ஆளுமையால், மாநிலத்தை ஆளும் தகுதியை இழந்துவிட்டார் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.