அஸ்ஸாமில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
அஸ்ஸாம் மாநிலத்தின் பார்பெட்டா பகுதியில் இன்று காலை 9:17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வானது பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும் நிலநடுக்கத்தால் எவ்வித உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.