இந்தியா

வங்கி முறைகேடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை: அருண் ஜேட்லி

DIN

வங்கிகளில் முறைகேடுகளில் ஈடுபட்டு கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பவா்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுத் துறை வங்கிகளின் தலைவா்களிடம் அருண் ஜேட்லி வலியுறுத்தியுள்ளாா்.

பொதுத் துறை வங்கிகளின் ஆண்டு நிதிச் செயல்பாடுகள் குறித்த கூட்டம் தில்லியில் அருண் ஜேட்லி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 21 பொதுத்துறை வங்கிகளின் தலைவா்கள் பங்கேற்றனா். 

இது வழக்கமாக நடைபெறும் ஆண்டு நிதிச் செயல்பாடுகள் குறித்த கூட்டம்தான் என்றாலும், பொதுத் துறை வங்கிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாராக் கடன் சுமையை எதிா்கொண்டுள்ளன.

மேலும், பாங்க் ஆஃப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சூழ்நிலையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சா் அருண் ஜேட்லி கூறுகையில், "பொருளாதாரத்தில் சீரான வளர்ச்சியைக் கண்டு வருவதாக" தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT