கேரள காங்கிரஸ் இளைஞரணி தொண்டர்கள் படுகொலை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கைது

காங்கிரஸ் இளைஞரணியைச் சேர்ந்த இருவர், மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டை கொலையில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
கேரள காங்கிரஸ் இளைஞரணி தொண்டர்கள் படுகொலை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கைது

காங்கிரஸ் இளைஞரணி தொண்டர்கள் 2 பேர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, அக்கட்சி சார்பில் திங்கள்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸார் மறியலில் ஈடுபட்டனர். பல இடங்களில் பேருந்துகள் மீது கல் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரள மாநிலம், காசர்கோடில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்த காங்கிரஸ் இளைஞரணியைச் சேர்ந்த இருவர், மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டை கொலையில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு தொடர்பிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா குற்றம்சாட்டியுள்ளார். 

இளைஞரணியினர் இருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கொலையாளிகளை நீதியின் முன் நிறுத்தும் வரை காங்கிரஸ் ஓயாது என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த இரட்டை கொலை தொடர்பாக பெரியா பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பீதாம்பரம், கேரள போலீஸாரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com