பயங்கரவாத அமைப்புகளுடன் பேச்சு நடத்துவதை கைவிட்டு, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி வலியுறுத்தினார்.
புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.
இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் சம்பந்தப்பட்ட புலனாய்வு விவரங்களை இந்தியா பகிர்ந்துகொண்டால், அந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். பிராந்தியத்தில் அமைதியான சூழல் நிலவுவதையே பாகிஸ்தானும் விரும்புகிறது.
தேர்தல் வரவுள்ளதால், புல்வாமா தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது என்று குற்றம்சாட்டி வாக்கு சேகரிப்பில் இந்திய அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் சூழல் வரும் என்று நம்புகிறேன் என்று விடியோ ஒன்றில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மெஹபூபா முஃப்தி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், பேச்சுவார்த்தையை நடத்துவதை தவிர்த்துவிட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக இம்ரான் கான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.