மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் கடந்த திங்கள்கிழமை இரவு 8 மணிக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் நுரையீரல் சம்பந்தமான சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பின்கீழ் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது
இதுகுறித்து இன்று தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை கூறுகையில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக தெரிவித்துள்ளது.