டிஜிபிக்கள் நியமனம்: மாநில அரசுகளின் மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

மாநில சட்டங்களை அமல்படுத்தி காவல்துறை டிஜிபிக்களை நியமிக்க உத்தரவிடக் கோரி மாநில அரசுகள் தரப்பில் தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
டிஜிபிக்கள் நியமனம்: மாநில அரசுகளின் மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

புது தில்லி: மாநில சட்டங்களை அமல்படுத்தி காவல்துறை டிஜிபிக்களை நியமிக்க உத்தரவிடக் கோரி மாநில அரசுகள் தரப்பில் தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

காவல்துறை டிஜிபிக்கள் நியமனம் என்பது மாநில அரசின் விவகாரம் என்றும், இதில் யுபிஎஸ்சி தலையிட முடியாது என்றும் உத்தரவிடக் கோரியும் கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், அரியானா, பிகார் ஆகிய மாநில அரசுகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசியல் தலையீட்டிலிருந்து போலீஸ் அதிகாரிகளை காக்க வேண்டும் என்ற பொது நல நோக்கில்தான், டிஜிபி நியமனம் குறித்து கடந்த காலங்களில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com