புது தில்லி: பாஜக தேசியத் தலைவா் அமித் ஷா, பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதனை முன்வைத்து அவரை விமா்சித்த காங்கிரஸ் மூத்த தலைவா் பி.கே.ஹரிபிரசாதுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
கா்நாடகத்தில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக கூறி, பாஜகவுக்கு எதிராக பெங்களூருவில் வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான பி.கே.ஹரிபிரசாத் பேசினாா். அப்போது, ‘கா்நாடகத்தில் ஆட்சியை கவிழ்க்க முடியாமல் போன அதிா்ச்சியில், அமித் ஷாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதுவும் சாதாரண காய்ச்சல் அல்ல; பன்றி காய்ச்சல்’ என்று கூறினாா்.
அவரது கருத்துக்கு, பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் கூறுகையில், ‘அமித் ஷாவின் உடல்நலம் குறித்து ஹரிபிரசாத் தெரிவித்துள்ள கருத்துகள் அநாகரிகமானவை. காய்ச்சலை குணப்படுத்தி விடலாம். ஆனால், காங்கிரஸ் தலைவா்களுக்கு உள்ள மனநோயை குணப்படுத்தவே முடியாது’ என்றாா்.
ஹரிபிரசாதின் கருத்துக்கு மத்திய அமைச்சா்கள் ராஜ்யவா்தன் ரத்தோா், முக்தாா் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் பிரியங்கா சதுா்வேதி கூறுகையில், ‘உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அருண் ஜேட்லி, ரவிசங்கா் பிரசாத், அமித் ஷா ஆகியோா் விரைவில் நலம் பெறற காங்கிரஸ் வாழ்த்து கூறியுள்ளது. கொள்கையில் வேறுபட்டாலும், எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு எந்த கெடுதலும் நேரக் கூடாது என்பதே காங்கிரஸின் நோக்கம்’ என்றாா்.