பன்றி காய்ச்சல் காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார்.
இது தொடர்பாக பாஜக மாநிலங்களவை உறுப்பினரும், ஊடகப் பிரிவுத் தலைவருமான அனில் பலூனி கூறுகையில்,
பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் பூரண உடல் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார். அமித் ஷாவுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.