ஜம்மு: காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பட்காம் மாவட்டம் சராரி ஷரிஃப் நகரில் உள்ள ஜின்பாஞ்சல் என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினரும் போலீஸாரும் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வந்தனர்.
பாதுகாப்பு படை வீரர்கள், பட்காம் போலீஸார் இணைந்த நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.