பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்தகங்கா மடாதிபதியும், லிங்காயத் தலைவருமான சிவகுமாரசுவாமி இன்று உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 111.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்தகங்கா மடம் உலகப் புகழ்பெற்றது. இதன் மடாதிபதி சிவகுமாரசாமி. இவருக்கு கடந்த சில நாட்களாக நுரையீரல் தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.
இவரது மறைவையொட்டி, 3 நாள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என்று கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது.
சிவகுமாரசாமியின் மறைவுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, கர்நாடக முதல்வர் குமாரசாமி உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.