கன்னௌஜ்: உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மின் சாதனத்தைத் தொடாமலேயே எலக்ட்ரிக் ஷாக் அடித்துள்ளது.
கன்னௌஜ் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் பாசித். அவர் வீட்டில் பயன்படுத்திய மின்சாரத்தின் மொத்த யூனிட் 178. அதற்கு சில சொற்பத் தொகை கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும்.
ஆனால், அதற்கு மாறாக அவருக்கு வந்திருக்கும் மின் கட்டணத் தொகை ரூ.23 கோடியே 67 லட்சத்து 71,524 ஆகும்.
அதிர்ந்து போன அப்துல் பாசித், மின்சார வாரியத்திடம் புகார் கூறியுள்ளார்.