பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் திங்கள்கிழமை கொலை செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸார் தெரிவிக்கையில், பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது பத்மா (38) என்பவருக்கும் அங்கிருந்த சக பெண்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர்கள் அனைவரும் பத்மாவை தாக்கியுள்ளனர். இதில் குடத்தால் பலமாகத் தாக்கப்பட்ட பத்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக சுந்தரம்மா என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறோம் என்றனர்.