ஐஃபோன் மோகத்தால் 15 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் தலைநகர் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதுதொடர்பாக தில்லி கமிஷனர் (மேற்கு) மோனிகா பரத்வாஜ் கூறுகையில், கடந்த ஜூலை 13-ஆம் தேதி விக்கி (15) என்பவரை காணவில்லை என மோதி நகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் பாஸாய் தாராபூர் பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் சிறுவன் உடல் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவரது உறவினருடன் சென்று ஆய்வு செய்தபோது அது காணாமல் போன விக்கியின் உடல் என்பது உறுதிசெய்யப்பட்டது. அங்கிருந்த சிசிடிவி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் நடைபெற்ற விசாரணையில், ஐஃபோன் திருட முயன்றபோது அதை தரமறுத்ததால் விக்கியை கொலை செய்ததாக அந்த 3 சிறுவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இதில் வேறு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதாக என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.