அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிளவட்டின் (என்ஆர்சி) இறுதி பட்டியலை வெளியிடுவதற்கான கெடுவை நீட்டிக்குமாறு உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசும், அஸ்ஸாம் மாநில அரசும் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளன.
தேசிய குடிமக்கள் பதிளவடு விவகாரம், அஸ்ஸாம் மக்களின் மிகப்பெரிய பிரச்னையாக இருப்பதால், அதன் இறுதி பட்டியலை ஜூலை 31-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது.
இந்நிலையில், இந்தக் கெடுவை நீட்டிக்குமாறு மத்திய அரசு மற்றும் அஸ்ஸாம் மாநில அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதி ஆர்.எஃப்.நாரிமன் ஆகிளயார் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு சார்பாக வாதாடிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "உள்ளூர் அதிகாரிகளின் தலையீட்டால், என்ஆர்சி பதிளவட்டில், நாட்டுக்குள் சட்டவிரோதமாக குடிளயறியவர்களின் பெயர்கள் அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளன.
உண்மையான இந்தியர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன. இந்த குழப்பத்தை சரிசெய்ய வேண்டும். உலக நாடுகளின் அகதி நாடாக இந்தியா இருக்க முடியாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 சதவீத பெயர்கள் மறுசரிபார்ப்பு செய்யப்பட வேண்டும். வங்கதேசத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களில் 20 சதவீத பெயர்களை மறுசரிபார்ப்பு செய்ய வேண்டும். மேலும், இறுதி பட்டியலை ஜூலை 31 -ஆம் தேதிக்குள் வெளியிடுவது மிகவும் கடினம் என்பதால், கெடுவை நீட்டித்து அனுமதியளிக்க வேண்டும்' என்றார்.
துஷார் மேத்தாவின் கருத்துகளை குறிப்பெடுத்துக் கொண்ட நீதிபதிகள், பட்டியல் மறுசரிபார்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் குறித்து வரும் 23-ஆம் தேதி விசாரிப்பதாக உத்தரவிட்டனர்.
அண்டை மாநிலமான வங்கதேசத்தில் இருந்து அஸ்ஸாமில் சட்டவிரோதமாகக் குடிளயறி வசிப்பவர்களை அடையாளம் காண்பதற்காக, அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிளவடு தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் வரைவு பட்டியல் கடந்த ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில், மொத்தமுள்ள 3.29 கோடி நபர்களில், 2.89 கோடி நபர்களின் பெயர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தன. சுமார் 40 லட்சம் பெயர்கள் விடுபட்டிருந்தன. அதில் 37,59,630 பெயர்கள் நிராகரிக்கப்பட்டு விட்டது. 2,48,077 பெயர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து, விடுபட்டவர்களின் பெயர்களைச் சேர்ப்பதற்கான பணியை என்ஆர்சி பதிளவடு தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹளஜலா தலைமையிலான குழு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.