மக்களவைத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்களை இறுதி செய்வதற்கான அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றனர்.
இதில், வடகிழக்கு மாநிலங்கள், பிகார், மகாராஷ்டிரம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.
புதன்கிழமையும் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அதன் பிறகு முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.