கர்நாடகாவில் 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலியானோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

கர்நாடக மாநிலம் தார்வார் நகரில் நடந்த கட்டட விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 
கர்நாடகாவில் 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலியானோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

கர்நாடக மாநிலம் தார்வார் நகரில் நடந்த கட்டட விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 

கர்நாடக மாநிலம், தார்வாட் குமரேஸ்வரநகரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த 5 மாடிக் கட்டடம், கடந்த மார்ச் 19-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் திடீரென சரிந்து விழுந்தது. 

இதில் கீழ்மாடியிலிருந்த கடைகள், ஹோட்டல்கள் உள்பட கட்டுமானப்பணிகளில் ஈடுபட்ட பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள், தீயணைப்பு படையினர் உதவியுடன் மீட்புபணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் இருந்து இதுவரை 57 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாயமாகி உள்ள 12 பேரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை தற்போது 14 ஆக உயர்ந்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com