பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

மேல்மருவத்தூர் சித்தர் பீடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றார்.
மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். 
மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். 

மேல்மருவத்தூர் சித்தர் பீடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றார். மக்களவைத் தேர்தலில் காஞ்சிபுரம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மேல்மருவத்தூருக்கு வந்தார். 
அப்போது அவர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்துக்கு வந்து, ஆன்மிக இயக்கத்தின் துணைத் தலைவரும், ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்களின் தாளாளருமான கோ.ப.செந்தில்குமாரை சந்தித்தார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு செந்தில்குமார் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தார்.
அதன் பின், ஆதிபராசக்தி அம்மன் கோயிலில் மூலவருக்கு நடைபெற்ற குங்கும அர்ச்சனையில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து, அருட்கூடத்தில் பங்காரு அடிகளாரிடம் அவர் ஆசி பெற்றார். 
அப்போது காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல், முன்னாள் அமைச்சர் வளர்மதி, அதிமுக மாவட்டச் செயலர் எஸ்.ஆறுமுகம், திருப்போரூர் ஒன்றியச் செயலர் குமரவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com