பிரதமர் மோடி நாளை தனது தாயிடம் நேரில் ஆசி பெறுகிறார்

பிரதமர் மோடி தனது தாயிடம் ஆசி பெற நாளை குஜராத் செல்லவிருப்பதாக தெரிவித்துள்ளார். 
பிரதமர் மோடி நாளை தனது தாயிடம் நேரில் ஆசி பெறுகிறார்

பிரதமர் மோடி தனது தாயிடம் ஆசி பெற நாளை குஜராத் செல்லவிருப்பதாக தெரிவித்துள்ளார். 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.  

இதனிடையே, தில்லியில் இன்று பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் எம்பிக்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதில், அமைச்சரவையில் கூட்டணி கட்சியினர் பங்கேற்பது குறித்து ஆலோசிக்க உள்ளனர். இந்நிலையில் தேர்தல் வெற்றியை தொடர்ந்து பிரதமர் மோடி நாளை மாலை குஜராத் சென்று தனது தாய் ஹீராபென்னிடம் ஆசி பெறுகிறார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், எனது தாயிடம் ஆசி பெறுவதற்காக, நாளை மாலை குஜராத் செல்கிறேன். நாளை மறுநாள் காலையில் காசிக்கு சென்று காசிக்கு சென்று என்னை மீண்டும் தேர்வு செய்த மக்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com