விவசாய நிலங்களில் வேத மந்திரங்கள் உச்சரித்தால் விளைச்சல் அதிகரிக்குமா?  கோவா அமைச்சர் விளக்கம் 

விவசாய நிலங்களில் விளைச்சலை அதிகரிக்க மந்திரங்களை தொடர்ந்து உச்சரியுங்கள் என்று விவசாயிகளுக்கு பரிந்துரை செய்துள்ளார்
விவசாய நிலங்களில் வேத மந்திரங்கள் உச்சரித்தால் விளைச்சல் அதிகரிக்குமா?  கோவா அமைச்சர் விளக்கம் 


பானஜி: விவசாய நிலங்களில் விளைச்சலை அதிகரிக்க மந்திரங்களை தொடர்ந்து உச்சரியுங்கள் என்று விவசாயிகளுக்கு பரிந்துரை செய்துள்ளார் கோவா மாநில விவசாயத் துறை விஜய் சர்தேசாய். 

கோவாவில் பாஜக தலைமையிலாக கூட்டணி ஆட்சியில் விவசாயத் துறை அமைச்சராக விஜய் சர்தேசாய் இருந்து வருகிறார். 

கோவாவைச் சேர்ந்த, சிவ யோகா பவுண்டேஷன் என்ற அமைப்பு, அண்டவெளி விவசாயம் என்ற புதிய விவசாய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் விஜய் சர்தேசாய் பேசுகையில், அண்டவெளி விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் பாதுகாப்பானவை; அவை எந்த ரசாயன உரங்கள் கலக்காமல் நச்சுத்தன்மை அற்றதாக இருக்கும். விவசாயிகள் தங்கள் வயல்வெளியில் நின்றுகொண்டு தொடர்ந்து 30 நிமிடங்கள் 'சாந்த் வேத' மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். 

அப்படி உச்சரிக்கும்போது அதிலிருந்து உருவாகும் அண்ட சக்தியால் நெற்பயிர்கள் அமோகமாக விளைச்சல் கொடுக்கும். இதற்கு சிவயோக விவசாயம் என்று பெயர். இந்த முறையினால் ஏராளமான விவசாயிகள் பலன் அடைந்துள்னர். இது எதிர்காலத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார். 

மேலும், பாஜக தலைமையிலான மாநில அரசாங்கம் பயிர் மகசூலை அதிகரிப்பதற்கு "பிரபஞ்ச விவசாயத்தை" ஊக்குவிப்பதாக கூறினார். 

அமைச்சரின் பேச்சுக்கள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அமைச்சரின் கருத்தை கேலி செய்யும் வகையிலும், நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com