ரூ.7 கோடி மதிப்புள்ள விண்கல்லை 30 ஆண்டுகளாக வீட்டின் கதவு முட்டுக்கொடுக்கப் பயன்படுத்திய அவலம்!

சுமார் ரூ.7 கோடி விலைமதிப்புடைய விண்கல்லை, கடந்த 30 ஆண்டுகளாக ஒருவர் தன் வீட்டின் கதவு அசையாமல் இருப்பதற்காக முட்டுக்கொடுக்கப்
ரூ.7 கோடி மதிப்புள்ள விண்கல்லை 30 ஆண்டுகளாக வீட்டின் கதவு முட்டுக்கொடுக்கப் பயன்படுத்திய அவலம்!


சுமார் ரூ.7 கோடி விலைமதிப்புடைய விண்கல்லை, கடந்த 30 ஆண்டுகளாக ஒருவர் தன் வீட்டின் கதவு அசையாமல் இருப்பதற்காக முட்டுக்கொடுக்கப் பயன்படுத்திய சுவாரஸ்யமும், அவலமும் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. 

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளரான மோனா சிர்பெஸ்குவிடம் அதே பகுதியை சேர்ந்த பெயர்கூறப்படாத மனிதர் ஒருவர் தன் வீட்டின் கதவு அசையாமல் இருப்பதற்காக முட்டுக்கொடுக்கப் பயன்படுத்தி வந்த ஒரு கல்லை கொடுத்து அதன் தன்மைகள் குறித்து சோதனை செய்யக் கூறியுள்ளார். 

சுமார் 10 கிலோ எடைக்கொண்ட அந்த அதிசய கல்லை ஆய்வு செய்ததின் முடிவில் ஆராய்ச்சியாளருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது 30 வருடங்களாகக் வீட்டின் கதவிற்கு முட்டுக்கொடுக்கப்பட்டிருந்த விண்கல் எனச் சோதனையில் தெரியவந்துள்ளது. 

1930-ம் ஆண்டுகளில் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு மிச்சிகனில் உள்ள எட்மோட் என்ற பகுதியில் உள்ள விளைநிலத்தில் விழுந்ததும் என்றும் அதனுடைய இன்றைய அமெரிக்கா டாலர் மதிப்பு 1 மில்லியன் டாலர் (இந்திய ரூபாயின் ரூ.7.37 கோடி) இருக்கும் என தெரிவித்தார்.

மேலும், மோனா சிர்பெஸ்கு, அந்த அதிசய கல்லை வாஷிங்டனில் உள்ள புகழ்பெற்ற ஸ்மித் சோனியன் இன்ஸ்டிட்யூட் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தார். அதனை ஆய்வு செய்தவர்கள் விண்கல் என உறுதி செய்தனர். தற்போது அதை விலை கொடுத்து வாங்க அனைவரும் போட்டிபோட்டு முன்வந்துள்ளனர். 

பெரும்பாலான விண்கல்லிலும் 90 முதல் 95 சதவீதம் வரை இரும்பு இருக்கும். ஆனால், இந்தக் கல்லில் 88 சதவிகிதம் இரும்பும், 12 சதவிகிதம் நிக்கல் இருப்பதும், இதுவரை பூமியில் விழுந்த விண்கற்களில் இதுவே பெரியது என்பது தான் இதன் தனி சிறப்பு. 

இதுகுறித்து வானவியல் ஆராய்ச்சியாளர் மோனா சிர்பெஸ்குவி கூறுகையில், என் வாழ்நாளில் இப்படி ஒரு சிறப்பு வாய்ந்த கல்லை நான் ஆராய்ச்சி செய்ததில்லை. மெக்சிகனில் காணப்பட்ட ஆறாவது மிகப்பெரிய விண்கல் இதுவாகும். இது என் வாழ்க்கையில் நான் பணியாற்றிய மிக மதிப்புமிக்க மாதிரி என்றும் தொடக்க கால சூரிய மண்டலத்தின் அங்கம் தற்போது என் கைகளில் கிடைத்துள்ளதாக உணர்ந்தேன் எனக் கூறினார்

பல கோடி மதிப்புடைய விண்கல்லை தனது வீட்டின் கதவு அசையாமல் இருப்பதற்காக முட்டுக்கொடுத்து வந்தவரும், பெயர் வெளியிடப்படாத உரிமையாளர் கூறுகையில், நான், கடந்த 1988-ஆம் ஆண்டுதான் அந்த நிலத்தை வாங்கினேன். அப்போது நிலத்துடன் சேர்ந்து இந்தக் கல்லும் எனக்குக் கிடைத்தது. நீண்ட நாள்களாக இந்தக் கல்லை பற்றி ஏதோ ஒரு சந்தேகம் எனக்குள் இருந்து வந்தது.  இதையடுத்து அதனை தெளிவுபடுத்திக் கொள்வதற்காகவே கல்லை சோதனைக்கு அளித்து தெளிவுபடுத்தக் கூறினேன். தற்போது அந்த கல் விண்கல் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதனை தற்போது விற்கவும், அதில் கிடைக்கும் விற்பனை தொகையில் 10 சதவீதத்தை மெக்சிகன் மத்திய பல்கலைக்கழகத்துக்கு வழங்க உள்ளதாக தெரிவித்தார். 

இதனிடையே நிலத்தின் முன்னாள் உரிமையாளர் 1930-ஆம் ஆண்டு தன் நிலத்தில் இந்தக் கல் இருந்ததாகக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com