ஹைதராபாத்: இந்தியாவில் முதல்முறையாக ஹைதராபாத்தில் நாய்களுக்கு என்று தனியாக பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக ஹைதராபாத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் நாய்களுக்கு என்று தனியாக அமைக்கப்பட்டுள்ள பூங்கா திறக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவில் உலகின் பல வகையான உயர்ந்த நாய்களை காணவும் வாங்கிச் சென்று வீட்டில் வளர்க்கவும் முடியும். நாய்களுக்கான பயிற்சி உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள், சிறிய நீச்சல் குளம், புல்வெளிகள் உள்ளிட்டவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் நாய்களுக்கென்று தனியாக பூங்கா துவங்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை, இதனால் ஹைதராபாத்தில் செல்ல பிராணியாக நாய் வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாய்களின் பலவகையான தோற்றங்களையும் அவற்றின் அரிய செய்கைகளையும் பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.