சேலம்: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம் மத்திய சிறையில் இருந்து 31 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம் மத்திய சிறையில் இருந்து 31 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்த கைதிகள் நன்னடத்தை அடிப்படையில், சேலம் மத்திய சிறையில் இருந்து இதுவரை 2 கட்டமாக 22 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இதேபோன்று வேலூர் மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையில் இருந்து 3 பெண்கள் உட்பட 32 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஏற்கனவே, 63 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.