திருவண்ணாமலை: தமிழக அரசு எந்த சூழலிலும் தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்காது என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக அரசின் கொள்கையே தனியார்மயம் கூடாது என்பதுதான். எனவே, தமிழக அரசு எந்த சூழலிலும் தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்காது என அமைச்சர் தங்கமணி உறுதியாக தெரிவித்தார்.