திருப்பத்தூர்: ஆந்திராவுக்கு செம்மரம் வெட்டச் செல்வதற்காக திருப்பத்தூர் அருகே பதுங்கி இருந்த 7 பேரை போலீஸார் கைது செய்தததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூா் புதுப்பேட்டை சாலையில் இன்று மாலை கிராமிய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வை நகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்ததில், முன்னுக்கு பின் முரணான தகவலைத் தந்துள்ளனர்.
பின்னர், அவர்கள் அனைவரும் கிராமிய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில்,திருப்பத்தூா் வட்டம், கொடுமாம்பள்ளியைச் சோ்ந்த விக்னேஷ்(22), கமலக்கண்ணன்(23), விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தைச் சோ்ந்த மூா்த்தி(39), ஏழுமலை(24), தமிழ்ச்செல்வன்(24), திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தைச் சோ்ந்த வெங்கடேசன்(26), ஜம்மனாமுத்தூரைச் சோ்ந்த சின்னராஜ்(30) என்பதும், இவா்கள் செம்மர கடத்தலில் ஈடுபட திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.
இதனையடுத்து, போலீஸார் இவா்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.