ஸ்ரீவில்லிப்புத்தூர்: பாஜகவின் மாநிலத் தலைவர் பொறுப்பை ஏற்க தாம் தயாராக உள்ளதாக நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் வழிபாடு செய்த எஸ்.வி.சேகரிடம், செய்தியாளர்கள் பாஜகவின் தமிழக மேலிடத்தை ஏற்கவில்லையா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், பொறுப்பை தன்னிடம் கொடுத்தால் தற்போது இருக்கும் வாக்கு வங்கியை விட அதிக வாக்கு வங்கியை உண்டாக்க முடியும் என்றார்.
செய்தியாளர் மீண்டும் ஒருமுறை கேள்வியை அழுத்திக் கேட்கவே, சுதாரித்துக்கொண்டவர், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அதற்காக தினமும் தமிழிசை வீட்டு முன் நிற்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார்.