வேலூர்: வேலூரில் கடன் தொல்லையால் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை தற்கோலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலூரை அடுத்த மேல்மொனவூர் ஈஸ்வரன் தெரு பகுதியை சேர்ந்த வெங்கடேசன். இவர் கொஞ்ச நாட்களாக கடன்தொல்லையால் அவதிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. போதிய வருமானம் இல்லாத நிலையில், கடன்சுமை அதிகரித்து வருவதால் மனமுடைந்த வெங்கடேசன், தனது 7 மற்றும் 9 வயதுடைய இரு பெண் குழந்தைகளையும் வீட்டியேலே தூக்கிட்டு கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடன்தொல்லையில் இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.