சென்னை நந்தனத்தில் இரு சக்கர வாகனம் மீது மாநகர அரசு பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
சென்னை சைதாப்பேட்டையில் இருந்து நந்தனம் சென்ற மாநகர அரசு பேருந்து முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்த பவானி, நாகலட்சுமி என்ற 2 பேர் உயிரிழந்தனர். சிவன் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.
விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.