தேவையானவை:
தோசை மாவு - 1 கிண்ணம்
பனீர் - 1 கிண்ணம்
ஒன்று இரண்டாக பொடித்த
பாதாம், பிஸ்தா, முந்திரி - 1 கிண்ணம்
செய்முறை:
தோசை தவாவில் 1 கரண்டி தோசை மாவை ஊற்றி பரப்பிவிட்டு துருவிய பனீரை தூவி, தோசையைச் சுற்றிலும் லேசாக எண்ணெய்யை ஊற்றி, மிதமான சூட்டில் மொறு மொறு என்று வார்க்கவும் பின்னர், தோசையை எடுக்கும் பொடித்த வைத்துள்ள நட்ûஸ 1 தேக்கரண்டி எடுத்து தோசையில் தூவி, மடித்து எடுக்கவும். சுவையான பனீர், நட்ஸ் தோசை தயார்.
இதற்கு தொட்டுக் கொள்ள கொத்துமல்லிச் சட்டி சுவையாக இருக்கும்.
தேவையானவை:
கொத்துமல்லித்தழை -1/2 கட்டு
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
பச்சைமளகாய் - 3
தக்காளி - 2 நறுக்கியது
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு, பெருங்காயப் பொடி - 1தேக்கரண்டி
செய்முறை:
ஆய்ந்த கொத்துமல்லித் தழை, பச்சைமிளகாய், தக்காளி ஆகியவற்றை லேசாக வதக்கிக் கொள்ளவும். பின்னர், தேங்காய்த் துருவலுடன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும் சுவையான கொத்துமல்லி சட்னி தயார்.