உங்களுக்கு புகைப்படக் கலையில் ஆர்வம் இருக்கிறதா? நீங்கள் எடுக்கும் புகைப்படங்கள் உங்கள் கணினி அல்லது மொபைலில் மட்டும் தேங்கிப் போகாமல் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் எனில் அதற்கான களமாக தினமணி இணையதளத்தின் ‘இன்ஸ்டாகிராம் புகைப்படப் போட்டி’யை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நீங்கள் எடுக்கும் அழகான புகைப்படங்கள் ஒவ்வொரு வாரமும் தினமணி டாட் காம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்படும்.
விநாயகர் சதுர்த்தி நம்மில் பலர் கொண்டாடி மகிழும் ஒரு பண்டிகை. இந்தப் போட்டியை துவங்க இதுவே சரியான தருணம். முதல் போட்டிக்கான தலைப்பு :
இன்று முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை நீங்கள் பார்க்கும் விதவிதமான விநாயகர் சிலைகளை ‘க்ளிக்’ செய்து இந்தப் போட்டிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் புகைப்படங்கள் தினமணி இணையதளத்திலும், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிடப்படும்.
இதில் உங்கள் வீட்டு விநாயகரையும் க்ளிக் செய்து, அதனுடன் உங்கள் விநாயக சதுர்த்தி அனுபவங்களையும் எழுதி அனுப்புங்கள்.
போட்டிக்கான சில விதிமுறைகள்