ஸ்பெஷல்

ரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க... இது நெறிமீறல்! (விடியோ)

கார்த்திகா வாசுதேவன்

சமீபத்தில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்  'ரெடி ஸ்டெடி போ’  மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘ஜில் ஜங் ஜக்’ எனும் இரு நிகழ்ச்சிகளைத் தடை செய்யச் சொல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அதைப்பற்றி பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதை அறிய பல்வேறு தரப்பினரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

கருத்துக் கணிப்பில் தெரிய வந்த நிஜம்...

மக்களில் ஒருசாரர் ரியாலிட்டி ஷோக்கள் நமது கலாசாரத்துக்கு சீர்கேடு விளைவிக்கக் கூடியவை என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள். அவர்களது கோரிக்கையெல்லாம் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் மக்களையும், இளைய தலைமுறையினரையும் பாஸிட்டிவ்வாக சிந்திக்கச் செய்யும் விதத்திலான நிகழ்ச்சிகளைத் தேர்வு செய்து அவற்றையே ஒளிபரப்ப வேண்டும் என்பதாகவும், வீண் வேடிக்கைக்காக நமது கலாசாரத்தை கேலி செய்யும் விதத்தில் அல்லது பண்பாட்டுக்கு ஒத்து வராத விதத்தில் அயல் மாநில நிகழ்ச்சிகளை காப்பி அடித்து அதை அப்படியே இங்கே பரப்பி விட்டு வெற்றுப் புகழ் தேடுவதாக இருக்கக் கூடாது என்பதாகவும் இருந்தது.

கருத்துக் கணிப்பில் சிலர்; தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வெறும் பொழுது போக்குக்கானவை. அவற்றை பார்த்து ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டுமே தவிர அவற்றை அப்படியே பின்பற்ற நினைக்கக் கூடாது. அவற்றில் அப்படியொன்றும் ஆபாசமாக இல்லை. சும்மா எதையோ நினைத்துக் கொண்டு எதையோ தடை செய்யச் சொல்லக் கூடாது. தடை செய்தால் மட்டும் நம் நாட்டில் கலாசாரம், பண்பாட்டு சீர்கேடுகள் நடைபெறாது என்பதற்கு உத்தரவாதம் உண்டா? என்று எதிர்கேள்வி கேட்கிறார்கள். பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது நன்மையும்ம், தீமையும். தீய எண்ணத்துடன் பார்த்தால் நல்லவை கூட தீயவையாகவே கண்ணில் படும். அதற்கென்ன செய்வது? என்கிறார்கள்.

ஆண்களில் சிலரோ, ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு சேனல் இருக்கிறது. அவற்றை முதலில் தடை செய்ய வேண்டும். ஒவ்வொரு செய்தியையும் அவரவர் சுயநலங்களுக்கு ஏற்றார் போல அவர்கள் இட்டுக் கட்டி சொல்லுகிறார்கள். பாரபட்சமாக இருக்கிறது. இதை முதலில் தடை செய்ய வேண்டும். என்றார்கள்.

பெண்களில் பலர் ஆச்சர்யகரமாக மெகா சீரியல்களைத் தடை செய்ய வேண்டும் என்றார்கள். 

கருத்தாக்கம்: கார்த்திகா வாசுதேவன்
ஒருங்கிணைப்பு: திவ்யா தீனதயாளன்
ஒளிப்பதிவு: ராகேஷ்
படத்தொகுப்பு: சவுந்தர்யா முரளி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முட்டை விலை நிலவரம்

நாமக்கல்லில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: நாமக்கல்லில் மூன்று மையங்களில் தொடக்கம்

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்

SCROLL FOR NEXT