தினமணி கொண்டாடும் இசை! ஜூன் 2 EVP ஃபிலிம் சிட்டி இசைமழையில் நனைய டிக்கெட் புக் செய்துட்டீங்களா?

இன்று இசை உருவாக்குபவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? - என்ற கேள்விக்கு ராஜா அளித்த பதில்; என் உடம்பே நான் சொல்வதைக் கேட்பதில்லை. இதில் அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்லும் தகுதி எனக்கெங்கே?
தினமணி கொண்டாடும் இசை! ஜூன் 2 EVP ஃபிலிம் சிட்டி இசைமழையில் நனைய டிக்கெட் புக் செய்துட்டீங்களா?

இசைஞானி இளையராஜாவுக்கு ஜூன் 2 பிறந்தநாள். அந்த நற்தருணத்தில் சென்னை, EVP  ஃபிலிம் சிட்டியில் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதற்கான முன்னோட்டமாக தினமணி மற்றும் நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் மற்றும் இணையதளங்களில் ராஜாவின் நேர்காணல்களும் அவர் குறித்த சுவாரஸ்யமான பல தகவல்களும் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. ராஜாவின் ரசிகர்களுக்கு அவர் குறித்த ஒவ்வொரு சின்னஞ்சிறு தகவலும் கூட பொக்கிஷம் போன்றதே! 

எத்தனை ராகங்கள் - எத்தனை பாகங்கள்! இன்றைய தினமணி கடைசிப் பக்கம் பாருங்கள்.

‘சினிமாவில் கையை காலை ஆட்டுவது போல் ஆகிவிட்டது இன்றைய இசை. இப்போதெல்லாம் யாரும் பல்வேறு இசைக்கலைஞர்களுடன் பாடகர்களுடன் சேர்ந்து இசையமைப்பது இல்லை. ஏனோதானோ என்று எதையோ செய்து கொண்டிருக்கிறோம். நல்ல ட்யூன் இல்லை. இசையில் உயிர் இல்லை. இசை என்பது எவ்வளவு உயர்ந்தது. எத்தனை ராகங்கள், எத்தனை பாவங்கள், இவை இன்றைய பாடல்கள் எவற்றிலும் இருப்பதில்லை. திருப்பதிக்குப் போய் மொட்டை போட்டுவிட்டு, புருவத்தையும் சேர்த்து வழித்தது மாதிரி இருக்கிறது இன்றைய இசை. இந்தியா முழுக்க இந்த நிலை தான். இசை உலகமே சிதைந்து கிடக்கிறது’

- இது தனது நேர்காணலில் ராஜாவே சொல்லி ஆதங்கப்பட்ட விஷயம். இதற்கான பதில் அளிக்க கடமைப்பட்டவர்களென இன்றைய இளம் இசையமைப்பாளர்களைச் சொல்லலாம்.

தினமணி கொண்டாட்டம் பகுதியில் இளையராஜாவின் 75 ஆவது பிறந்தநாளை ஒட்டி அவரிடம் 75 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அத்தனை கேள்விகளுக்கும் ராஜா ஸ்டைலில் பட் பட்டென பாப் கார்ன் பொறித்திருந்தார் இசைஞானி.

சாம்பிளுக்கு சில கேள்விகளையும் பதில்களையும் பாருங்கள்.

1. அதிகம் கேட்டு ரசித்த பாடல்?

மாலைப்பொழுதின் மயக்கத்திலே... கேட்டதை விட அதிகமாக முறை பாடிய பாடல் இது.

2. டி. வி யில் பார்க்கும் நிகழ்ச்சி?

டி வி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதே இல்லை

3. படித்ததில் பிடித்த புத்தகம்?

ரமணர் வாழ்க்கை வரலாறு

4. பொது வாழ்க்கையில் பிடித்த தலைவர்?

என் வாழ்க்கையே பொதுவாக இருக்கிறது.

5.முதல் சம்பளம்?

வைகை அணையில் வேலை செய்த போது ஒருநாளைக்கு ஒரு ரூபாய் வீதம் வாரத்துக்கு 7 ரூபாய்கள், எல்லாம் புத்தம் புது ரூபாய் நோட்டுகள்.

6. மகன்கள், மகளுக்குச் சொல்லும் அறிவுரை?

அதை தனியாகச் சொல்லிக் கொள்வேன்.

7. சென்னையில் பிடித்த பகுதி?

பிரசாத் ஸ்டுடியோ

8. இசை தவிர்த்து வேறு என்னென்ன வேலைகள் செய்துள்ளீர்கள்?

இசையே பெருங்கொடை. வேறு என்ன வேண்டும்?

9. வாலி எழுதிய பாடல்களில் பிடித்தது?

மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர மறுத்திடுமா?

10.  பாதுகாத்து வரும் பொருள்?

மனசு.

:)) ஆம் அது தான் இளையராஜா. பாதுகாத்து வரும் பொருள் மனசு. அந்த மனசு சில நேரங்களில் வெளிப்படையாகக் கருத்துக்களை எண்ணிச் சொல்லி சர்ச்சைகளிலும் சிக்கி விடுவதுண்டு. ஆயினும் இன்றும் நெடுஞ்சாலைகளில் ஊறும் ஒவ்வொரு லாரியிலும், வேன்களிலும், விரையும் ஒவ்வொரு சொகுசுப்பேருந்திலும் சில்லென்று மனசைத் தொட்டுப் பறப்பது ராஜாவின் ராகங்கள் தான் என்பதால் ராஜாவை அவரது வார்த்தைகளுக்காக அதிகமும் வெறுப்பவர் என எவருமில்லை தமிழகத்தில்.

சினிமா எக்ஸ்பிரஸ் நேர்காணலில் முன் வைக்கப்பட்ட கேள்வியொன்று;

இப்போது இண்டர்நெட் இருப்பதால் உலக இசை பற்றி எல்லோருக்கும் தெரிகிறது. இசையில் எத்தனை வகைகள் இருக்கின்றன என்று எல்லோராலும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நீங்கள், அந்தக்காலத்திலேயே மேற்கத்திய இசையை உங்களது திரைப்படங்களில் தேவையான, பொருத்தமான இடங்களில் பயன்படுத்தி இருந்தீர்கள், இது எப்படி சாத்தியமானது? என்கிற கேள்வி சினிமா எக்ஸ்பிரஸ் சுதிர் நேர்காணலின் போது இளையராஜாவின் முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்;

‘கேட்டுக் கேட்டு வருவது தான். உலக இசையைக் கரைத்துக் குடித்தவர்கள் பலர் இருக்கலாம். அதற்காக அவர்களுக்கு சினிமாவைப் பற்றி எல்லாமும் தெரியும் என்று சொல்லி விட முடியுமா? அது ஒரு லைப்ரரியனின் வேலை. அவர்களுக்கு இசையின் வகைகளைப் பற்றி, இசையமைப்பாளர்களின் பெயர்களைப் பற்றி வேண்டுமானால் தெரியலாமே தவிர அதற்காக அவர்களுக்கு சப்ஜெக்ட் முழுதாகத் தெரியும் என்று சொல்லி விட முடியுமா? சப்ஜெக்ட் தெரிய வேண்டும். இங்கு சப்ஜெக்ட் என்பது சப்ஜெக்டே அல்ல, அது வேறு!’ - என்று புன்னகைக்கிறார் ராஜா. அது தான் ராஜா.

இசையமைப்பாளர் இளையராஜா, பாடகரானதின் சுவாரஸ்யப் பின்னணி?

‘பாடல்களுக்கு நோட்ஸ் எழுதும் போது அதனடியில் அதை எந்தப் பாடகர் அல்லது பாடகி பாட வேண்டும் என்பதையும் குறிப்பிடுவது எனது வழக்கம். அதைப்பார்த்து விட்டுத்தான் எனது அசிஸ்டெண்டுகள் அந்தந்த பாடகர்களை அழைத்து பாடல்களுக்கு அவர்களை ஒப்பந்தம் செய்வார்கள். அப்படி பாடகர்களை அழைக்கும் போது சில சமயங்களில் எவருமே அந்த நேரத்தில் கிடைக்கவில்லை என்றால், சரி விடு, நானே பாடி விடுகிறேன் என்று தொடங்கியது தான்.

ஜனனி, ஜனனி ஜகம் நீ, அகம் நீ பாடல் ஜேசுதாஸ் பாடுவதாக இருந்த பாடல். ஆனால், அவர் அன்று வரவில்லை என நான் பாடினேன். ட்ராக் பாடி விட்டு அவர் வந்ததும் அவரை வைத்து ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம் என்றிருந்தேன். ஆனால், பிறகு அந்தப் பாடல் என் குரலிலேயே நன்றாக இருப்பதாகக் கூறப்பட்டதால் அப்படியே விட்டு விட்டேன். நான் பாடகனானது இப்படித்தான்.

இந்தப் பாடலை நானே பாடலாம் என்று ஆசைப்பட்டு பாடிய பாடல் என்றால், ‘நான் தேடும் செவ்வந்திப்பூ இது’ பாடலைச் சொல்லலாம். நான் பாடகனானது என் ஆசையாலோ, இயக்குனர்களின் வேண்டுகோளினாலோ அல்ல, மக்கள் கை தட்டி ரசித்தார்கள், நான் பாடகனானேன். என்கிறார் ராஜா.

இன்று இசை உருவாக்குபவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

- என்ற கேள்விக்கு ராஜா அளித்த பதில்;

என் உடம்பே நான் சொல்வதைக் கேட்பதில்லை. இதில் அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்லும் தகுதி எனக்கெங்கே அருகதை இருக்கிறது. என்கிறார்.

ராஜாவுக்கு, எம் எஸ் வி முத்தம் கொடுத்த அனுபவம்?

ராஜாவின் இசையைக் கேட்டு மெய்மறந்து ரசித்து சிற்சில தருணங்களில் அவரைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்து திக்குமுக்காடச் செய்வது எம் எஸ் வி ஸ்டைல். ஒருமுறை ராஜாவின் இசை நிகழ்ச்சியொன்றில் மூன்றாம் பிறை திரைப்படத்தின், ‘கண்ணே கலைமானே’ பாடலைப் பாட ஆயத்தம் நடந்து கொண்டிருந்தது. அப்போது ராஜாவை அணுகிய எம் எஸ் வி, டேய், இந்தப் பாட்டுக்கு நான் ஆர்மோனியம் வாசிக்கட்டுமா/ என்று கேட்டிருக்கிறார். அதற்கு ராஜா, ஆனந்த அதிர்ச்சியில், ‘என்னண்ணே, இப்படிக் கேட்கறீங்க, என்று அதை முழு மனதுடன் அங்கீகரிக்க, எம் எஸ் வி ஆர்மோனியம் வாசிக்கத் தொடங்கினார். பாடலில்,  

‘ஏழை என்றால் ஒரு வகை அமைதி, ஊமை என்றால் அதிலொரு அமைதி, நீயோ கிளிப்பேடு’ என்ற வரிகள் வருகையில் ராஜாவின் கம்போஸிங்கைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்ட எம் எஸ் வி ஓடிப்போய் ராஜாவுக்கு கொடுத்தது தான் இந்த உம்மா. இப்படி பாராட்டுதலாக எம் எஸ் வியிடம் முத்தம் பெற்ற பொன்னான தருணங்கள் இன்னும் சிலவும் கூட உண்டு என்று புன்னகைக்கும் ராஜாவின் முகத்தில் அந்த நாள் ஞாபகங்கள் இன்னும் பசுமையுடனே நினைவிலிருக்கின்றன.

ராஜாவைப் பற்றி சிலாகிப்பதென்றால் இப்படிச் சொல்லிக் கொண்டே போக நிறைய விஷயங்கள் உண்டு. 

எத்தனை இசையமைப்பாளர்கள் புதுசு புதுசாக முளைத்து வந்தாலும் ராஜா ராஜா தான்.

ஜூன் 2 அன்று நடைபெறவிருக்கும் இளையராஜா இன்னிசை மழையில் இன்னொரு ஸ்பெஷல் என்ன தெரியுமா?

உங்களுக்கு முன்னமே தெரிஞ்சிருக்கும் தெரியாதவங்க இப்போ தெரிஞ்சுக்குங்க. ராஜாவுடன் அன்னைக்கு பாடும் நிலா பாலுவும், கான கந்தர்வன் ஜேஸுதாஸும் கூட உங்களை இசை மழையில் நனைவிக்கப் போறாங்களாம். கூட எஸ். ஜானகி, சித்ரா, சுதாரகுநாதன், எல்லாம் பாடறாங்களாம்.

இப்போதைக்கு இது போதும். மீதியை ஜூன் 2, EVP ஃபிலிம் சிட்டி, இளையராஜா இன்னிசை மழையில் நீங்களே நனையும் போது நேரடியாக நீங்களே உணர்வீர்கள்.

‘சிந்திய வெண்மணி, சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா’

‘அழைக்கிறான் மாதவன், ஆநிரை மேய்த்தவன்... குருவே சரணம், குருவே சரணம் ராகவேந்திரா, ஸ்ரீராகவேந்திரா’

வீணைக்கு வீணைக்குஞ்சு, நாதத்தின் நாதப்பிஞ்சு விளையாட இங்கு வரப்போகுது... என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் கண்ணீர் வருகிறதா? 

அப்படியென்றால் நீங்கள் ஒரு தீவிரமான ராஜா பைத்தியம்.

பித்தம் தெளிய குற்றாலத்திற்குச் செல்வதைப் போலத்தான் இசை மழையில் நனைவதும். நனைந்தால் தெளிந்து விடும் :)

ஜுன் 2 EVP ஃபிலிம் சிட்டி, பெங்களூர் ஹைவே, சென்னை.

புக் யுவர் டிக்கெட்ஸ் நெள!

மேலும் பல சுவாரஸ்யத் தகவல்களுக்கு கீழுள்ள லிங்கை அழுத்துங்கள்...

ராஜாவுடனான தினமணி.காம் நேர்காணல்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com