மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
சுந்தரேசுவரரின் 12 திருவிளையாடல்களை மையமாக வைத்து நடைபெறும் ஆவணி மூலத் திருவிழா ஆக. 9(நேற்று) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆகஸ்ட் 21-ல் கருங்குருவிக்கு உபதேசம், 16-ம் தேதி நாரைக்கு மோட்சம் அருளிய லீலை, 17-ல் மாணிக்கம் விற்ற லீலை, 18-ல் தருமிக்குப் பொற்கிழி அருளியது எனத் தொடர்ச்சியாக 19-ல் உலவாக்கோட்டை, 20-ல் பாணனுக்கு அங்கம் வெட்டியது, திருஞானசம்பந்தர் சைவ சமயத்தை நிலைநாட்டியது,
ஆக.21-ல் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஆகஸ்ட் 22-ல் மாணிக்கவாசகருக்காக நரியைப் பரியாக்கிய லீலையும், 23-ல் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெற உள்ளது.
திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மதுரையில் எழுந்தருள்வார். அன்று காலை திருக்கோயிலில் இருந்து சுவாமி வைகை ஆற்றோரம் உள்ள புட்டுத்தோப்பு மண்டபத்தில் எழுந்தருள்வார்.
ஆக.,24-ல் விறகு விற்றல், 25-ல் சட்டத்தேர், 26-ல் தீர்த்த உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
திருவிழா முடியும் வரை திருக்கோயில் சார்பிலோ, உபயதாரர் சார்பிலோ திருக்கல்யாணம், தங்கரதம் உள்ளிட்ட உபய நிகழ்ச்சிகள் நடைபெறாது என கோயில் இணை ஆணையர் என். நடராஜன் தெரிவித்துள்ளார்.