செய்திகள்

ஏகாம்பரநாதர் கோயிலில் லட்ச தீபம்

DIN


ஏகாம்பரநாதர் கோயிலில் லட்ச தீப விழா விமரிசையாக நடைபெற்றது.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரத்தையொட்டி சிவன் கோயில்களில் லட்ச தீப விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர், சித்தீஸ்வரர், முத்தீஸ்வரர், கச்சபேஸ்வரர், வழக்கறுத்தீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் லட்ச தீப விழா திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி, ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள மூலவருக்கு சிறப்பு மஹா அபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 
இதற்காக, திரளான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து கோயில் நந்தி மண்டபம் மற்றும் பிரகாரங்களில் நெய் தீபமேற்றி சிவனை வழிபட்டனர். இதனால், கோயில் பிரகாரம், வளாகம் முழுவதும் தீப ஒளியில் மின்னியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT