செய்திகள்

திருவண்ணாமலை மகா தீப மலையில் புனித நீர் தெளிப்பு: அண்ணாமலையார் பாதத்துக்கு பூஜை

தினமணி


திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, மலை மீது பக்தர்கள் ஏறிச் சென்றதால் ஏற்பட்ட தோஷத்தைப் போக்க புதன்கிழமை மலை மீது புனித நீர் தெளிக்கப்பட்டதுடன், மலை உச்சியில் உள்ளஅண்ணாமலையார் பாதத்துக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் பின்புறம் 2,668 அடி உயர மலை அமைந்துள்ளது. இந்த மலையையே சிவனாக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். 
ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை மகா தீபத் திருவிழாவன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
அன்றைய தினமும், தொடர்ந்து 11 நாள்கள் எரியும் மகா தீபத்தை ஏற்றவும், மகா தீபத்தை தரிசிக்கவும் மலை மீது பக்தர்கள் சென்று வருவர். 
இந்த மலையையே சிவனாக வழிபடுவதால், மலையை காலால் மிதித்ததால் ஏற்பட்ட தோஷத்தைப் போக்க, தீபத் திருவிழா முடிந்ததும் மலை மீது புனித நீர் தெளிக்கப்படும்.
அதன்படி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் புனித நீர் கலசங்களுக்கு கோயில் சிவாச்சாரியர்கள் சிறப்பு பூஜை செய்தனர். 
பின்னர், புனித நீர் கலசங்களை பக்தர்கள் எடுத்துச் சென்று மலையின் பல்வேறு பகுதிகளில் தெளித்து வழிபட்டனர்.
அண்ணாமலையார் பாதத்துக்கு பூஜை: மேலும், மலையின் உச்சியில் உள்ள ஸ்ரீஅண்ணாமலையார் பாதத்துக்கு மஞ்சள், குங்குமம் இட்டு, தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT