குன்றத்தூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் அருள்மிகு நாகேஸ்வரன் ஆலயம் அமைந்துள்ளது. அதற்கு அருகே சேக்கிழார் மணி மண்டத்தில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பெரம்பலூர் சேக்கிழார் செல்விகள் A.குங்குமப்ரியா - A.மங்களப்ரியா அவர்களின் 63-வது நிகழ்ச்சியாக 63 நாயன்மார்களின் வரலாறு மற்றும் தேவார இன்னிசைப் பாடல்கள் நிகழ்ச்சி (வயலின், மிருதங்கம், பக்கவாத்தியங்களுடன்) நடைபெறுகிறது. ஆர்வமுள்ளவர்கள் அவசியம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
நாள் - 14.07.2018 (சனிக்கிழமை)
நேரம் - மாலை 5.30 - 8.00 மணி வரை
இடம் - தெய்வச்சேக்கிழார் மணி மண்டபம், குன்றத்தூர், சென்னை - 69