ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5.00 மணிக்கு திறக்கப்படுகிறது.
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5.00 மணிக்கு திறக்கப்படுகிறது.

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை நாட்களைப் போல் தமிழ் மாதத்தில் முதல் 5 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 

இந்நிலையில், வரும் ஆடி மாத பூஜைக்காக இன்று முதல் 5 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. எனவே, இன்று மாலை கோயில் நடை திறக்கப்பட்டு, 21-ம் தேதி இரவு 10 மணி வரையில் கோயில் நடை திறந்திருக்கும்.

தந்திரி மனுநம்பூதிரி முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். இன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

இந்த ஐந்து நாட்களும் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com