செய்திகள்

அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்நாள் பரிகாரம்!

DIN

நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரமாகக் கருதப்படும் அஸ்வினி மேஷ ராசியிலும், மகம் நட்சத்திரம் சிம்ம ராசியிலும், மூலம் நட்சத்திரம் தனுசு ராசியிலும் இடம் பெற்றுள்ளது. 

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் செய்யக்கூடிய பரிகாரமாக ஜோதிட ரீதியாகக் கணித்து வழங்கப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றி வாழ்வில் நலன்கள் பல பெறுவோமாக...வாங்க பரிகாரத்தைப் பார்ப்போம். 

இந்த நட்சத்திரக்காரர்கள் சற்று ஆதிக்க குணம் நிறைந்தவர்கள். எடுத்த காரியத்தை எப்பேர்பட்டாவது முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இந்த நட்சத்திரம் உள்ளவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் படபடப்பு காட்டக்கூடாது. நிதானத்துடன் எந்த ஒரு  செயலையும், பொறுமையுடன் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். 

பரிகாரமாக இவர்கள் தினமும் 10 நிமிடம் தியானம் செய்தாலே போதும்...அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்குவார்கள். ஏன்? இந்த நட்சத்திரக்காரர்கள் மட்டும் தியானம் செய்ய வேண்டும் என்று யோசிக்கலாம். 

ஏனெனில், இந்த நட்சத்திரக்காரர்கள் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். கேதுவின் அதிதேவதை கணபதி. கணபதியின் உருவம் யோகத்தைக் கொடுக்கக் கூடியது. எனவே யோகா - தியானம் செய்வது நன்மையைத் தரும். இந்த நட்சத்திரக்காரர்களுக்கு இது வாழ்நாள் பரிகாரமாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT