திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
ஆண்டுக்கு மூன்று நட்சத்திரம் மற்றும் மூன்று திதிகள் என ஆறு முறை நடராஜருக்கு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று அருணாசலேஸ்வரர் கோயிலில் நடராஜர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அபிஷேகத்தைக் கண்டு களித்தனர்.