திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் டிச.4-ல் கார்த்திகை பிரம்மோற்சவம் துவக்கம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் டிச.4-ல் கார்த்திகை பிரம்மோற்சவம் துவக்கம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் டிசம்பர் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறுவுள்ளது. 

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் டிசம்பர் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறுவுள்ளது. 

திருமலை தேவஸ்தானம் சார்பில் திருச்சானூர் தாயார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. அதன்படி, இந்தாண்டும் இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் அனைவரும் செய்து வருகின்றனர். டிசம்பர் மாதம் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்வுள்ளது. 

விழாவில், டிசம்பர் 8-ல் கஜவாகனமும், 9-ல் தங்கதேரோட்டமும், கருட வாகனமும், 11-ல் ரத உற்சவமும், 12-ம் தேதி பஞ்சமி தீர்த்தத்துடன் பிரம்மோற்சவ விழா நிடைவடைகிறது. 

பிரம்மோற்சவத்தையொட்டி ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட உள்ளது. பிரம்மோற்சவ விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com