திருமலையில் நாகசதுர்த்தியை முன்னிட்டு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி மாட வீதியில் வலம் வந்தார்.
திருமலையில் ஆண்டுதோறும் நாகசதுர்த்தி நாளன்று மாலையில் பெரிய சேஷ வாகனப் புறப்பாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி ஞாயிற்றுக்கிழமை நாகசதுர்த்தியை முன்னிட்டு மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் மாடவீதியில் வலம் வந்தார். இந்த நிகழ்வில் அர்ச்சகர்களும், தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பெருமாளை வழிபடுவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதியில் திரண்டனர்.