தலையில் குல்லா அணிந்த முருகன் எங்குள்ளார் தெரியுமா?

முருகப்பெருமான் ஒவ்வொரு தலங்களிலும் ஒவ்வொரு விதமாகக் காட்சியளிக்கின்றார்.
தலையில் குல்லா அணிந்த முருகன் எங்குள்ளார் தெரியுமா?


முருகப்பெருமான் ஒவ்வொரு தலங்களிலும் ஒவ்வொரு விதமாகக் காட்சியளிக்கின்றார். அதில், வித்தியாசமான கோலங்களில் காட்சியளிக்கு சில தலங்களைப் பற்றி பார்ப்போம். 

• பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது செட்டிகுளம் என்ற ஊர். இவ்வூரில் அருளும் முருகப்பெருமான், கையில் செங்கரும்புடன் காட்சி அளிக்கிறார். உறையூர் சோழ மன்னனுக்காகக் கையில் கரும்புடன் காட்சி அளித்தவர், இன்று மலை மீது நமக்காகக் கரும்புடன் காட்சி அளிக்கிறார். அபிஷேகத்தின்போது கரும்பின் இடையில் உள்ள கணுக்கள் மிகவும் தெளிவாகத் தெரிவதை நாம் இன்றும் காணலாம்.

• சிதம்பரத்துக்கு வடகிழக்கில் உள்ளது சி. மானப்பட்டி என்ற ஊர். இவ்வூரில் அகத்தியர் ஓலைச்சுவடியில் இடம்பெற்ற புகழ்மிக்க முருகன் தலம் உள்ளது. இங்கு பங்குனி உத்திரம், தைப்பூசம், சஷ்டி, சித்திரை பவுர்ணமி நாள்களில் அரிவாள் மீது நின்று வேல் ஆட்டம் ஆடுகிறார், முருகன் அருள்பெற்ற தவத்திரு சின்னையன் சுவாமிகள்.

• புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசல் என்ற தலத்தில் தலையில் குல்லா அணிந்த முருகனைத் தரிசிக்கலாம்.

• கம்பம் அருகில் உள்ளது சுருளிமலை. இங்கு கந்தபெருமான் அருள்கிறார். மலையில் உள்ள குகையில் அருவி மணல் விபூதியாக மாறுவதைக் காணலாம்.

• முருகப்பெருமானுக்கு இந்திரன் தன் ஐராவதத்தைத் தந்த இடம் உத்திரகோசமங்கை (இராமநாதபுரம்).

• பூதல் (குமரி மாவட்டம்) பார்வதி மலையில் அருளும் கந்த பெருமான் பிரம்மசாரியாக வணங்கப்படுகிறார். ஆதலால் அங்கு பெண்களுக்கு அனுமதி இல்லை.

• மயிலாடுதுறை வட்டத்தில் உள்ளது வழுவூர். இங்கு முருகப் பெருமான் அன்னையாகிய பார்வதி தேவி கையில் குழந்தையாக அருள்பாலிக்கிறார்.

• புதுக்கோட்டை மாவட்டம் ஒற்றைக் கண்ணனூரில் முருகனுக்கு கருங்கல் கோயில் உள்ளது.

• இரண்டு தலைகள் உடைய முருகனுக்கு அக்னிநாதர் என்ற பெயர். இவரைச் சென்னிமலையில் காணலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com