கும்பகோணம், ஸ்ரீ பிரஹன்நாயகி சமேத ஸ்ரீ நாகேஸ்வரர் ஆலயத்தின் துலாஸ்நானம் - கடைமுழுக்கு தீர்த்தவாரி பெருவிழா இன்று காலை 12 மணிக்கு மேல், காவிரி ஆற்றின் பகவத் படித்துறையில் நடைபெற்றது.
இவ்விழாவினை முன்னிட்டு, ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் வீதிப் புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- குடந்தை. ப.சரவணன் 9443171383