அம்பத்தூர், மேனாம்பேட்டில் உள்ள ஸ்ரீ அன்னபூரணி சமேத ஆத்மநாத ஈஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மனோன்மணி உடனாய ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் ஆலயத்தில் மகா ஹோமம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது.
நிகழும் விளம்பி வருடம் கார்த்திகை மாதம் (14-ம் தேதி) 30.11.18 வெள்ளிக்கிழமை அன்று மகா அஷ்டமியை முன்னிட்டு காலை 10.30 முதல் 12.30 வரை ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு இராகு கால பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அன்றைய தினம் மாலை 4 மணியளவில் மகா ஹோமமும், மாலை 6.30 மணியளவில் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு மகா அபிஷேகமும், அதைத்தொடர்ந்து 7.15 மணிக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் 8.00 மணியளவில் தூப தீப ஆராதனையும் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரின் அருளை பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.