மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மாலை அணியத் திரண்ட ஐயப்ப பக்தர்கள்

சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் கார்த்திகை முதல் தேதியான இன்று...
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மாலை அணியத் திரண்ட ஐயப்ப பக்தர்கள்

சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் கார்த்திகை முதல் தேதியான இன்று காலை முதல் மாலை அணியப் ஐயப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 

ஆண்டுதோறும் சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாதம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுவது வழக்கம். அதன்படி கார்த்திகை மாதத்தின் முதல் நாளான இன்று கருப்பு மற்றும் நீல நிறத்தில் உடை அணிந்து, பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாலை அணிந்து வருகின்றனர். 

மகாலிங்கபுரத்தில் ஐயப்ப பக்தர்கள் 'சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா' என்ற கோஷமிட்டபடி மாலை அணிந்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com