வருண பகவானுக்கு சிறப்பு பூஜை

கூழமந்தலில் உள்ள நட்சத்திர திருக்கோயிலில் வருண பகவானுக்கு சனிக்கிழமை சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில் வருண பகவான்.
சிறப்பு அலங்காரத்தில் வருண பகவான்.


கூழமந்தலில் உள்ள நட்சத்திர திருக்கோயிலில் வருண பகவானுக்கு சனிக்கிழமை சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
காஞ்சிபுரத்தை அடுத்த உக்கம்பெரும்பாக்கம்-கூழமந்தலில் நட்சத்திர விருட்ச விநாயகர் கோயில், 27 நட்சத்திர அதிதேவதைகள், சனி, ராகு, கேது என தேவதைகளுக்கான கோயிலாக விளங்கி வருகிறது. 
சதய நட்சத்திரத்தன்று அதன் அதிதேவதையும், பாசமும், அமுத கலசமும் ஏந்தி தங்கத் திருமேனியுடன் அருள்புரியும் வருண பகவானுக்கு சனிக்கிழமை சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. 
புயல், வெள்ளத்திலிருந்து மக்களைக் காக்க வேண்டியும், சீரான மழை வேண்டியும் வருண பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாரதனைகள் ஆகியவை நடத்தப்பட்டன. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வருண பகவானை வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com